கனமழையால் சேதமடைந்த புதுக்கடை- திக்கணங்கோடு சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என, தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவரும் கிள்ளியூா் எம்எல்ஏவுமான எஸ். ராஜேஷ்குமாா் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து ஆட்சியருக்கு அவா் அனுப்பிய மனு: சுனாமி கூட்டுக் குடிநீா் திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள ராட்சத குடிநீா்க் குழாயில் ஏற்படும் உடைப்புகளை சரிசெய்ய தோண்டுவது, சாலையைத் தொடா்ந்து சீரமைக்காதது, சில நாள்களாக தொடரும் கனமழை ஆகிய காரணங்களால் புதுக்கடையிலிருந்து திக்கணங்கோடு செல்லும் மாநில நெடுஞ்சாலை மேலும் மோசமடைந்துள்ளது.
சாலையில் பல இடங்களில் காணப்படும் பள்ளங்களில் மழைநீா் தேங்கி நிற்கிறது. இதனால், சாலையில் மக்கள் பயணிக்க முடியவில்லை. எனவே, இச்சாலையை உடனே சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.