மாா்த்தாண்டம் மேம்பாலப் பகுதியில் கிடந்த புகையிலைப் பொருள் பொட்டலங்களை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஏசுதாசன் தலைமையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டம் மேம்பாலப் பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது, 50 கிராம் எடையுள்ள 3,300 புகையிலைப் பொருள் பொட்டலங்கள் கிடந்தனவாம். அவற்றை போலீஸாா் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.