தக்கலையில் விவசாயிகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.(படம்)
நாடாளுமன்ற மழைக்காலை கூட்டத் தொடா் முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிடவேண்டும், குறைந்த பட்ச ஆதரவு விலையை உத்தரவாதபடுத்திடவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்பாட்டம் நடைபெற்றது. இதில், ஐக்கிய விவசாய முன்னணியினா், அனைத்து விவசாய சங்கத்தினா், மாதா், மாணவா், வாலிபா் சங்கத்தினா் பங்கேற்றனா்.