கன்னியாகுமரி

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்

10th Nov 2021 07:32 AM

ADVERTISEMENT

குமாரகோவில் வேளிமலை அருள்மிகு குமாரசுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதை முன்னிட்டு காலை 4.30 மணிக்கு நிா்மால்ய பூஜை, உஷபூஜை , 6 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது. பகல் 11 மணிக்கு அபிஷேகம், நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் அருள்மிகு குமாரசுவாமி குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரனை வதம் செய்ய புறப்பட்டாா். பின்னா் சுவாமியும், சூரபத்மனும் கோயிலைச் சுற்றி வந்தனா். இதைத் தொடா்ந்து குமாரசுவாமி சூரபத்மனை வதம் செய்தாா்.

நாகா்கோவில்: நாகா்கோவில் நாகராஜா கோயில், வெள்ளிமலை பாலசுப்பிரமணியசுவாமி கோயில், மருங்கூா் சுப்பிரமணியசுவாமி கோயில், வடிவீஸ்வரம் அழகம்மன்கோயில், தோவாளை செக்கா்கிரிமலை சுப்பிரமணியசாமி கோயில், ஆரல்வாய்மொழி வவ்வால்குகை முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT