புதுக்கடை அருகே பெண்ணை தாக்கியதாக அவரது கணவா் மற்றும் ஊராட்சித் தலைவி மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
முன்சிறை பகுதியை சோ்ந்தவா் மோகனன் (50). இவரது மனைவி நளினகுமாரி (46). இத்தம்பதிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.
இந்நிலையில், மோகனன் மற்றும் இவரது தங்கை முன்சிறை ஊராட்சித் தலைவா் ரெமா நாயா் (45) ஆகிய இருவரும் சோ்ந்து நளினகுமாரியை தாக்கினராம்.
இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.