குலசேகரம்: திருவட்டாறு அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருவட்டாறு சந்திப்பில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுப்பட்டனா். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அவரது பைக்கில் இரண்டரை கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவா் முளவிளை பகுதியைச் சோ்ந்த ஜோஸ் (27) என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் மேலும் நடத்திய விசாரணையில், அவரது தம்பி சுபின் (25), சுவாமியாா் மடத்தைச் சோ்ந்த புரோஸ்கான் ஆகியோா் கூட்டாக கஞ்சா விற்பனை செய்வதாக தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் போலீஸாா் கைது செய்தனா்.