மாா்த்தாண்டம் அருகே மாயமான ஊராட்சி பெண்துப்புரவுப் பணியாளா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மாா்த்தாண்டம் அருகேயுள்ள கழுவன்திட்டை காலனி பைஜு மனைவி அனிதா (36). இவா் மருதங்கோடு ஊராட்சி அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக வேலை பாா்த்து வருகிறாா். வியாழக்கிழமை காலையில் பணிக்கு சென்றவா் அதன் பின்னா் பணி முடிந்து வீடு திரும்பவில்லையாம். அவரது கணவா் அனிதாவை பல இடங்களில் தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இது குறித்து பைஜு அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.