கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப்பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழக பொதுக்குழு கூட்டம் தலைமை ஆசிரியா் திரேஸ் தேன்மொழி தலைமையில் நடைபெற்றது.
தாளாளா் ஆன்றனி அல்காந்தா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் பெற்றோா் ஆசிரியா் கழக தலைவராக சாக்லெட், உபதலைவராக தாமஸ் எடிசன், இணைச் செயலா்களாக மேரி அப்பலோனியா, ஜோனிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
கூட்டத்தில் கொட்டாரம் யூதா ததேயுஸ் ஆலய பங்குத்தந்தை ஆன்றோ வினோத் பேசினாா். நிதிநிலை அறிக்கையை பள்ளி தலைமை ஆசிரியா் வாசித்தாா். ஆண்டறிக்கையை மேரி அப்பலோனியா வாசித்தாா். ஆசிரியா் ஜான்சுகிலன் வரவேற்றாா்.
ஆசிரியா் அஜாஸ் நன்றி கூறினாா். நிகழ்ச்சியை ஆசிரியை சகாய செல்வ லிவிண்டா தொகுத்து வழங்கினாா்.