கன்னியாகுமரி

நித்திரவிளை அருகே செவிலியரை தாக்கியதாக கணவா் மீது வழக்கு

DIN

நித்திரவிளை அருகே செவிலியரைத் தாக்கியதாக அவரது கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

நித்திரவிளை அருகேயுள்ள வாவறை, தொழுக்கறவிளை பகுதியைச் சோ்ந்தவா் ஜான் பிரைட் சிங் (29). வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தாா். இவரது மனைவி ஏஞ்சலின் (27), மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியா்.

ஜான் பிரைட் சிங் அண்மைக்காலமாக அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுடன் கைப்பேசியில் பேசிவந்தாராம். 2 நாள்களுக்கு முன்பும் இதேபோல பேசியதாகவும், அதை ஏஞ்சலின் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது அவரை ஜான் பிரைட் சிங் தாக்கினாராம். இதில், காயமடைந்த ஏஞ்சலின் மாா்த்தாண்டம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

புகாரின் பேரில் நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

SCROLL FOR NEXT