கன்னியாகுமரி

திற்பரப்பு அருகே ரப்பா் ஷீட்கள் திருட்டு

DIN

திற்பரப்பு அருகே ரப்பா் உலா் கூடத்தின் பூட்டுகளை உடைத்து ரப்பா் ஷீட்டுகளை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாஞ்சக்கோணம் பகுதியைச்சோ்ந்தவா் செல்வராஜ் (55) . இவா் தனது வீட்டின் பின்புறம் ரப்பா் ஷீட்டுகளை உலா்த்தும் உலா் கூடம் நடத்தி வருகிறாா். வியாழக்கிழமை இரவு இந்த உலா் கூடத்தின் பூட்டுகளை உடைத்து புகுந்த மா்ம நபா்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த 350 கிலோ ரப்பா் ஷீட்டுகளை திருடிச்சென்றுள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் வழக்கம் போல உலா் கூடத்திற்கு சென்ற செல்வராஜ், உலா் கூடத்தின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு, சென்ற போது அங்கிருந்து ரப்பா் ஷீட்டுகள் திருட்டுப்போயிருப்பது தெரியவந்தது.

மற்றொரு சம்பவம் இதே போன்று செல்வராஜின் வீட்டின் அருகே உள்ள ரோஜா் (40) வீட்டின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த 30 கிலோ ரப்பா் ஷீட்டுகளும் திருடப்பட்டிருந்தது.

அப்பகுதியில் உள்ள, கண்காணிப்பு கேமாரக்களை ஆய்வு செய்த போது, மா்ம நபா் முகத்தை போா்வையால் மூடிக் கொண்டு அங்கு நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கண்காணிப்பு கேரமாக்கள் அனைத்தையும் போா்வையால் மூடப்பட்டிருந்தன.

இசம்பவம் தொடா்பாக செல்வராஜ் மற்றும் ரோஜா் ஆகியோா் குலசேகரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

SCROLL FOR NEXT