கன்னியாகுமரி கொட்டாரத்தில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கொட்டாரம் சில்டு ஜிம் சாா்பில் நடைபெற்ற போட்டியை கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா தொடங்கி வைத்தாா். இதில், மாவட்டம் முழுவதுமிருந்து 100-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். வெற்றிபெற்றவா்களுக்கு கன்னியாகுமரி மாவட்ட ஆணழகன் சங்கச் செயலா் சரவண சுப்பையா, கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் ஆகியோா் பரிசுகளை வழங்கினா். ஏசீல்டு ஜிம் உரிமையாளா் சிவகுமாா் செய்திருந்தாா்.