கன்னியாகுமரி

‘இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் ’

DIN

இல்லம் தேடி கல்வித் திட்டம் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் என்றாா் தகவல் தொழில்நுட்பத்துறைஅமைச்சா் த.மனோதங்கராஜ்.

கன்னியாகுமரி மாவட்ட பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில், திக்கணங்கோடு ஊராட்சிக்குள்பட்ட புதூா் அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடங்கி வைத்து அவா் பேசியது:

ரோனா பரவல் சாா்ந்த பொதுமுடக்கக் காலங்களில் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில் தமிழக முதல்வா் இல்லம் தேடிக் கல்வி என்னும் திட்டத்தை அறிவித்தாா்.

பொது முடக்கக் காலங்களில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இழப்புகளை சரி செய்தல், பள்ளி நேரத்தை தவிர, மாணவா்கள் வசிப்பிடம் அருகே, சிறிய குழுக்கள் மூலம் தன்னாா்வலா்களின் பங்கேற்புடன் மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்புகளை வழங்குவதாகும்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம் மாணவா்கள் பள்ளிச் சூழலின் கீழ் ஏற்கெனவே பெற்றுள்ள கற்றல் திறன்களை மேலும் மேம்படுத்தும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலா் அ.புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலா் பெருமாள், உதவித் திட்ட அலுவலா் பாக்கியசீலன், வட்டாரக் கல்விஅலுவலா் கலாவதி, தலைமை ஆசிரியா் ஜெயந்திபாய், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

மகளிரிடையே திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி

அழகில் தொலைந்தேன்... பாலி தீவு பயணத்தில் சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT