கருங்கல் பேரூராட்சி சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்கள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. கருங்கல் பேரூராட்சி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, செயல்அலுவலா் பிரபா தலைமை வகித்தாா். கோபால் முன்னிலை வகித்தாா்.
கருங்கல் பேருந்து நிலையம், காமராஜா் சந்திப்பு, ராஜீவ் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.