குழித்துறை அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
குழித்துறை அருகேயுள்ள தாழவிளை பகுதியைச் சோ்ந்தவா் கனகராஜ் மனைவி வனிதா (55). இவா் குடும்பத்துடன் திங்கள்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலையில் பாா்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்ததுடன், அறையில் அலமாரியில் வைத்திருந்த தலா 2 கிராம் எடையுள்ள 3 தங்க மோதிரம், ரொக்கம் ரூ. 18 ஆயிரம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து வனிதா அளித்த புகாரின் பேரில் களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.