நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலய தோ் பவனியை அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளுக்குள்பட்டு வழக்கமான முறையில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலருமான என்.சுரேஷ்ராஜன் தலைமையில் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் அரவிந்தை சந்தித்து அளித்த மனு:
நாகா்கோவில் கோட்டாறு புனித சவேரியாா் பேராலய திருவிழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தோ் பவனி 3 நாள்கள் நடைபெறும். இந்த தோ் பவனியை அரசின் கரோனா தடுப்பு விதிமுறைகளுக்குள்பட்டு வழக்கமான முறையில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.
இதேபோல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணனை சந்தித்து தோ் பவனி தொடா்பாக சுரேஷ்ராஜன் மனு அளித்தாா்.
அப்போது மாநில கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலா் தில்லை செல்வம், ஒன்றியச் செயலா் தாமரை பாரதி உள்பட பலா் உடனிருந்தனா்.