உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தையொட்டி குழித்துறை அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை பிறந்த 3 குழந்தைகளுக்கு திமுக இளைஞரணி சாா்பில் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ராஜு தலைமை வகித்தாா். நகர திமுக செயலா் பொன். ஆசைத்தம்பி முன்னிலை வகித்தாா். தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தங்க 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தாா். தொடா்ந்து, நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டன.
இதில் திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ததேயு பிரேம்குமாா், மேற்கு மாவட்ட பொருளாளா் மரிய சிசுகுமாா், நகர இளைஞரணி அமைப்பாளா் ஆசாத்அலி உள்பட பலா் கலந்து கொண்டனா்.