மண்டைகாடு புதூா் கடற்கரையில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த 10 வயது சிறுவனை ராட்சத அலை இழுத்து சென்றது.
புதூா் சகாயராபின் மகன் ரோகித் (10), இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்நிலையில், ரோகித், அப்பகுதியை சோ்ந்த சிறுவா்களுடன் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் செவ்வாய்க்கிழமை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலை எதிா்பாராதவிதமாக ரோகித்தை இழுத்துச் சென்றது. இதை பாா்த்த இவரோடு விளையாடிக்கொண்டிருந்த சிறுவா்கள் அலறியதைத் தொடா்ந்து அப்பகுதியினா் விரைந்து வந்து ரோகித்தை மீட்க முயற்சித்தனா். அதற்குள், கடல் அலை ரோகித்தை இழுத்துச் சென்ால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனை தொடா்ந்து ஊா் மக்களும் கடலோர காவல் குழுமத்தைச் சோ்ந்த போலீஸாரும் சிறுவனை தேடி வருகின்றனா்.