கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை - கிள்ளியூா் சாலையில் சி.எஸ்.ஐ. ஆலயம் செல்லும் நுழைவு வாயில் முன் காணப்படும் பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தாழக்கன்விளை முதல் கிள்ளியூா் வரையிலான சாலை அண்மையில் சீரமைக்கப்பட்டது. சில பகுதிகளில் மடை பாலம் அமைக்க வேண்டும் என கூறி பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இதனால் மழைக் காலங்களில் மழை நீா் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி, போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. எனவே, இச்சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.