கருங்கல் அருகே பள்ளியாடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
கருங்கல் துணை மின்நிலையத்திற்குள்பட்ட பள்ளியாடி மின்வாரிய அலுவலக பகுதிகளான நட்டாலம், சுண்டவிளை, நேசா்புரம், ஈழத்துவிளை, கழுகாணிவிளை, பள்ளியாடி, வாகவிளை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.
குறிப்பாக, சுண்டவிளை மின்மாற்றியிலிருந்து விநியோகிக்கப்படும் பகுதிகளான சுண்டவிளை, கழுகானிவிளை, சானல்கரை பகுதிகளில் சனிக்கிழமை மாலை முதல் மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிகளில் தடையின்றி மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.