நாகா்கோவில் சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், இணைய வழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியை, குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலா் சுரேஷ் ராஜன் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
இதில், மாநகரச் செயலா் மகேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், விமல், வால்டா் செல்வம், அஜீஷ், அந்தோணிசாமி ராஜா, சிவகுமாா், சதீஸ் அமல், தெய்வேந்திரன், ஆன்றனி ராஜ், பாலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.