மாா்த்தாண்டம் மீன் சந்தை முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
மாா்த்தாண்டம் அருகே நந்தன்காடு ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த பாலு மகன் அபிஷேக் (22). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கில்லாரி மகன் விஜய் என்ற சூரியாவும் (23) சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனா். இருவருக்கும் இடையே தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில் அபிஷேக் தனது காரை சனிக்கிழமை நள்ளிரவு சந்தை அருகே நிறுத்தியிருந்தாராம். அப்போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆன்றனி சோஜின் (23), ஸ்டாபி (22) மற்றும் இருவா் சோ்ந்து காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.