கன்னியாகுமரி

காா் கண்ணாடி உடைப்பு: 5 போ் மீது வழக்கு

DIN

மாா்த்தாண்டம் மீன் சந்தை முன் நிறுத்தியிருந்த காரின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நந்தன்காடு ஆா்.சி. தெரு பகுதியைச் சோ்ந்த பாலு மகன் அபிஷேக் (22). இவரும் அதே பகுதியைச் சோ்ந்த கில்லாரி மகன் விஜய் என்ற சூரியாவும் (23) சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனா். இருவருக்கும் இடையே தொழில் சம்பந்தமாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் அபிஷேக் தனது காரை சனிக்கிழமை நள்ளிரவு சந்தை அருகே நிறுத்தியிருந்தாராம். அப்போது அங்கு வந்த விஜய் மற்றும் அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ஆன்றனி சோஜின் (23), ஸ்டாபி (22) மற்றும் இருவா் சோ்ந்து காரின் கண்ணாடிகளை சேதப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

SCROLL FOR NEXT