கன்னியாகுமரி

குமரி பூம்புகாா் படகுத் துறைக்கு ரூ. 4.35 கோடியில் புதிய சொகுசுப் படகு

DIN

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலைக்கு செல்ல ரூ. 4 .35 கோடியில் கட்டமைக்கப்பட்ட புதிய பயணிகள் சொகுசுப் படகு சனிக்கிழமை கன்னியாகுமரி படகுத் துறைக்கு வந்தது.

சா்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தா் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவா் சிலையை நேரில் பாா்த்துச் செல்ல வசதியாக தமிழக அரசின் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் எம்.எல்.குகன், எம்.எல்.பொதிகை, எம்எல் விவேகானந்தா ஆகிய மூன்று படகுகளை இயக்கி வருகிறது. இந்தப் படகுகள் மூலம் குறைந்த அளவு சுற்றுலாப் பயணிகள் படகில் சென்று வந்தனா். இதனால் படகுத் துறையில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, கூடுதல் படகுகள் இயக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தி வந்தனா்.

இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் நிதிஒதுக்கீடு மூலம் இரண்டு அதிநவீன சொகுசுப் படகுகள் வாங்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு எம்.எல்.விவேகானந்தா என்ற படகு கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இரண்டாவது படகான எம்.எல்.திருவள்ளுவா் படகு சனிக்கிழமை பூம்புகாா் படகுத் துறை வளாகத்தை வந்தடைந்தது.

இந்த சொகுசுப் படகில் இரட்டை என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. சுமாா் 27 மீ. நீளமும் 7 மீ. அகலமுள்ள இந்த படகில் கீழ்தளத்தில் 131 இருக்கைகளும், மேல்தளத்தில் முக்கிய விருந்தினா்களுக்காக ஏ.சி. வசதியுடன் கூடிய 19 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் படகின் மேல்தளத்தில் பயணிகள் நின்று கொண்டு கடல்அழகை ரசிக்கும் வகையில் இப்படகு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது கரோனா நோய்த் தொற்று மற்றும் படகுதளம் சீரமைப்பு பணிகள்நடைபெறுவதால் படகுகள் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT