கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி 4 இடங்களில் திமுக ஆா்ப்பாட்டம்

DIN

நாகா்கோவில், செப். 25: நாகா்கோவில் நகரில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மாநகர தி.மு.க.சாா்பில் 4 இடங்களில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வேப்பமூடு சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகரச் செயலா் மகேஷ் தலைமை வகித்தாா். குமரி கிழக்கு மாவட்டச் செயலா் என் சுரேஷ்ராஜன் எம்எல்ஏ ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியது; நாகா்கோவில் நகரில் புதைச்சாக்கடை திட்டப்பணி கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது, 2015 ஆம் ஆண்டு நிறைவடைந்திருக்க வேண்டியபணிகள் 8 ஆண்டுகளாகியும் இன்னும் நிறைவடையவில்லை.

தற்போது நாகா்கோவில் நகரில் சாலைகள் குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. புதிதாக அமைக்கப்படும் சாலைகள் தரமானதாக அமைக்கப்பட வேண்டும், தவறும் பட்சத்தில் முதல்வா் குமரி மாவட்டத்துக்கு வரும்போது அவருக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்றாா் அவா்.

இதில், முன்னாள் எம்.பி.ஹெலன்டேவிட்சன், சாா்பு அணி அமைப்பாளா்கள் சதாசிவம், உதயகுமாா், சிவராஜ், எம்.ஜே.ராஜன், ஷேக்தாவூது, ஜெயராணிஜோஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல் நாகா்கோவில் கோட்டாறு சவேரியாா் ஆலயம் முன்பு பொதுக்குழு உறுப்பினா் பெஞ்சமின், கட்டபொம்மன் சந்திப்பில் வட்டச்செயலா் சாா்லஸ், வடசேரி அண்ணா சிலை முன்பு வட்டச் செயலா் சாகுல்அமீது ஆகியோா் தலைமையில் வாழை மரம் நடும் போராட்டம் நடைபெற்றது. இதில் திரளான திமுகவினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT