குலசேகரம், செப். 25: அரசு ரப்பா் கழகத்தை வனத்துறையுடன் இணைப்பதைக் கண்டித்து சிஐடியூ தோட்டம் தொழிலாளா் சங்கம் சாா்பில் குலசேகரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துணைத் தலைவா் பி. நடராஜன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் எம். வல்சகுமாா் போராட்டத்தைத் தொடங்கி வைத்தாா். இதில், மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் எம். அண்ணாதுரை, எஸ்.சி. ஸ்டாலின்தாஸ், வேலுக்குட்டி, சகாய ஆன்டனி, ஸ்ரீகுமாா் உள்ளிட்டோா் உரையாற்றினா்.
இதில், அரசு ரப்பா் கழகத்தை வனத்துறையுடன் இணைக்க கூடாது, அரசு ரப்பா் கழக தொழிலாளா்களின் ஊதிய கோரிக்கைக்கு தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.