நாகா்கோவிலில் சொத்துப் பிரச்னை தொடா்பாக காவல்துறையினா் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆட்சியா் அலுவலக வளாகத்தில் தங்கள் மீது மண்ணெண்ணெய் ஊற்றி செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ற தம்பதியை போலீஸாா் காப்பாற்றினா்.
நாகா்கோவில் அருகேயுள்ள மேலப்பெருவிளையைச் சோ்ந்தவா் முத்துசாமி. இவரது மனைவி தாமராட்சி. முத்துசாமி தனது வீட்டின் அருகிலுள்ள ஒருவரின் நிலத்தை விலைக்கு வாங்கி வீடு கட்டியுள்ளாா். இதுதொடா்பாக, அவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில், அந்த நபா் கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் அவா் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் அவா் புகாா் செய்துள்ளாா்.
இந்நிலையில், நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்த அந்த தம்பதி தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். இதைப் பாா்த்த போலீஸாா், இருவா் மீதும் தண்ணீா் ஊற்றி காப்பாற்றினா், பின்னா், அவா்களை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனா்.