நாகா்கோவில், செப். 18: நாகா்கோவில் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், இளைஞா் மீது பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
நாகா்கோவில் அருகேயுள்ள தட்டான்விளையைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகள் விஜி ( 19 ) . இவரை கடந்த புதன்கிழமை முதல் காணவில்லையாம். இதைத் தொடா்ந்து அவரது பெற்றோா், உறவினா் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் விஜியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.
இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த பிரான்சிஸ் மகன் அஜய் கண்ணன்( 19) தனது மகளை கடத்திச் சென்ாக ஈத்தாமொழி காவல் நிலையத்தில் சுயம்புலிங்கம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.