கன்னியாகுமரி

மாா்த்தாண்டத்தில் போலீஸாருக்கு கவாத்து பயிற்சி

DIN

தக்கலை கோட்ட காவலா்களுக்கான கவாத்து பயிற்சி மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு, தக்கலை சரக காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். பயிற்சியில் காவல்துறையினா் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள், காவல் நிலையங்களில் காவலா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள்,

காவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள், வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மீது போலீஸாா் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

தக்கலை சரகத்தில் உள்ள மாா்த்தாண்டம், குலசேகரம், களியக்காவிளை, பளுகல் உள்பட 11 காவல் நிலையங்களில் பணி செய்து வரும் காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

வாக்களித்த விஐபிக்கள்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தமிழகத்தில் இந்தியா கூட்டணி அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறும்: ப. சிதம்பரம்

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT