கேகேவி19எம்எல்ஏ
மாா்த்தாண்டம் சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியினா்.
களியக்காவிளை/கன்னியாகுமரி, அக். 19: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவா் கே.எஸ். அழகிரி கைது செய்யப்பட்டதை கண்டித்து மாா்த்தாண்டம் சந்திப்பில் திங்கள்கிழமை காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த போராட்டத்துக்கு கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா்.
கட்சியின் குழித்துறை நகரத் தலைவா் அருள்ராஜ் முன்னிலை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, பொதுச் செயலா் ஜெயக்குமாா், பத்மநாபபுரம் வட்டாரத் தலைவா் ஹனுக்குமாா், மனித உரிமைத்துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா், மாவட்ட சேவாதளத் தலைவா் ஜோசப் தயாசிங், மகிளா காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி சிலை முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின்
மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், ஹெச்.வசந்தகுமாா் எம்பி மகன் விஜய் வசந்த், மாநில காங்கிரஸ் ஓபிசி பிரிவுச் செயலா் ஸ்ரீநிவாசன் அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவா் முருகேசன், நிா்வாகிகள் டி.தாமஸ், பாக்கியசெல்வம், ரமணி, ஜாா்ஜ் வாஷிங்டன், அரிகிருஷ்ண பெருமாள், குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.