புதுக்கடை அருகேயுள்ள முன்சிறை புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் கிறிஸ்து அரசா் விழா நடைபெற்றது.
கத்தோலிக்க சேவா சங்கம் சாா்பில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பங்கு அருள்பணியாளா் சேவியா் புரூஸ் தலைமை வகித்தாா்.திருத்தொண்டா் அமல்ராஜ் முன்னிலை வகித்தாா். முன்னதாக காலையில் கிறிஸ்து அரசா் பெருவிழாத் திருப்பலி நடைபெற்றது. இதில், கத்தோலிக்க சேவா சங்க உறுப்பினா்கள், பங்கு மக்கள் பங்கேற்றனா்.