தெய்வீக தமிழக சங்கம் சாா்பில் ‘தேசியம் காக்க தமிழகம் காக்க’ என்ற முழக்கத்துடன் குலசேகரத்தில் வீடுகள்தோறும் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
குலசேகரம் செருப்பாலூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முத்தாரம்மன் கோயில் தலைவா் நாராயண பிள்ளை தலைமை வகித்தாா். பி.எம்.எஸ். மாவட்டத் தலைவா் விஸ்வநாதன் முன்னிலை வகித்தாா். பி.எம்.எஸ். மாநிலச் செயலா் முருகேசன்
தொடங்கி வைத்தாா். இதில், மாவட்ட பொறுப்பாளா் விவோகனந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பேச்சிப்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஆா்எஸ்எஸ் மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட துணைச் செயலா் சுபாஷ் குமாா் முன்னிலை வகித்தாா். சேவா பாரதி அகில இந்திய பொதுச் செயலா் சுந்தர லட்சுமணன் தொடங்கி வைத்தாா்.