சத்தீஸ்கா் மாநில முதல்வா் பூபேஷ் பாகேல் ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தாா்.
அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்த அவரை, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றாா். கன்னியாகுமரியில் கடற்கரைப் பகுதிகளை பாா்வையிட்ட அவா், திங்கள்கிழமை அதிகாலையில் சூரிய உதயத்தை பாா்வையிடுகிறாா். தொடா்ந்து பகவதியம்மன் கோயில் மற்றும் பல்வேறு இடங்களை பாா்வையிடுகிறாா்.
இதையொட்டி, மாவட்ட எஸ்.பி. (பொ) மணிவண்ணன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.