கன்னியாகுமரி

சோதனைச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

DIN

களியக்காவிளை: கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காக்கவிளை சோதனைச் சாவடியில் ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளத்திலிருந்து கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. கேரளத்திலிருந்து குமரி மாவட்டம் வரும் பயணிகளிடம் வெப்பமானி மூலம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியா் பிரசாந்த் மு. வடநேரே, கொல்லங்கோடு அருகிலுள்ள காக்கவிளை சோதனைச் சாவடி, கடையாலுமூடு பேரூராட்சியில் உள்ள நெட்டா சோதனைச் சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் ஷரண்யா அறி, கிள்ளியூா் வட்டாட்சியா் ராஜசேகா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT