கருங்கல்: புதுக்கடை அருகே தேங்காய்ப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக ஆலய பங்கு பணியாளா் மீது போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வகுகின்றனா்.
தேங்காய்ப்பட்டினம் பகுதியில் அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்
பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், மத போதகா்கள் பங்கேற்றுப் பேசினா். இதில், பனவிளை கத்தோலிக்க சபை ஆலய பங்கு அருள்பணியாளா் ஜாா்ஜ் பொன்னையா, தமிழக முதல்வா் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து
புதுக்கடை போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.