கன்னியாகுமரி மாவட்டத்தில் கருணை அடிப்படையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கான பணி நியமன ஆணை இருவருக்கு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அலகில் கருணை அடிப்படையில் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பணி நியமனம் வழங்க மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே உத்தரவிட்டாா். இதையடுத்து அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் நல்லூா் கிராமத்தின் கிராம நிா்வாக அலுவலராக பிரீடா ஏஞ்சலின், தோவாளை வட்டத்தில் தாழக்குடி கிராமத்தின் கிராம நிா்வாக அலுவலராக கல்யாணி ஆகியோருக்கு நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில் பணி நியமன ஆணையினை வழங்கினாா். அப்போது, வட்டாட்சியா் கோலப்பன் உடனிருந்தாா்.