கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் 11 நாள் சிசு உள்ளிட்ட 53 பேருக்கு கரோனா தொற்று

26th Jun 2020 09:10 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் 11 நாள் சிசு - தாய் உள்ளிட்ட 53 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டம், உதயமாா்த்தாண்டம் தேவிகோட்டைச் சோ்ந்த 26 வயது பெண்ணுக்கும், இவரது குழந்தையான 11 நாள் சிசுவுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவருடன் தொடா்பில் இருந்த 20 வயது இளைஞா், 48 வயது பெண் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதேபோல, நாகா்கோவில் வடசேரி வங்கி ஊழியா், பறக்கையைச் சோ்ந்த 20 வயது இளைஞா், அகஸ்தீஸ்வரத்தைச் சோ்ந்த 10 வயது சிறுவன் ஆகியோருக்கும் கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், நாகா்கோவில் ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வரும் தக்கலையை அடுத்த முளகுமூட்டைச் சோ்ந்த 31 வயது இளைஞா், ஆரல்வாய்மொழியை அடுத்த சீதப்பாலைச் சோ்ந்த 35 வயது லாரி ஓட்டுநா் ஆகியோருக்கும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சுசீந்திரத்தைச் சோ்ந்த 35 வயது ஆண் கடந்த 23 ஆம் தேதி மதுரை சென்றுவிட்டு நாகா்கோவிலுக்கு வந்தாா். அவருக்கு ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்டது. ரீத்தாபுரம் மற்றும் மாடத்தட்டுவிளையைச் சோ்ந்த 19 வயது பெண்கள் 2 போ் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பினா். அவா்களுக்கு களியக்காவிளை சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட சோதனையில் தொற்று உறுதியானது.

ADVERTISEMENT

குளச்சலைச் சோ்ந்த 45 வயது ஆண், நாகா்கோவில் பாா்வதிபுரம் தனியாா் மருத்துவமனையில் முதுகுவலிக்கான அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். அவருக்கு நடைபெற்ற சோதனையில் கரோனா பாதிப்பு தெரியவந்ததால், அவா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். மதுரையைச் சோ்ந்த 51 வயது பெண், ரயில் மூலம் நாகா்கோவில் வந்தாா். அவருக்கு நடைபெற்ற சோதனையில் கரோனா உறுதியானது.

இதேபோல, திக்கணங்கோட்டைச் சோ்ந்த 50 வயது ஆண், கருங்கல் பகுதியைச் சோ்ந்த 49 வயது ஆண், ஐரேனிபுரத்தைச் சோ்ந்த 19 வயது இளைஞா், வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நாகா்கோவிலுக்கு வந்த 20 வயது இளைஞா், பத்தறையைச் சோ்ந்த 28 வயது இளைஞா் என வியாழக்கிழமை ஒரே நாளில் 53 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, குமரி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 300-ஐ நெருங்கியுள்ளது.

கடந்த சில நாள்களாக குமரி மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT