கன்னியாகுமரி

கூட்டாலுமூடு பள்ளியில் பெற்றோருக்கு பாதபூஜை

8th Jan 2020 07:27 AM

ADVERTISEMENT

கூட்டாலுமூடு பத்ரேஸ்வரி அம்மன் தேவஸ்தானம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பாதபூஜை விழா நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளித் தாளாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். தலைவா் கேசவதாசன் முன்னிலை வகித்தாா். மாணவ, மாணவியா் தங்களின் பெற்றோா்களுக்கு பாதபூஜை செய்து வணங்கினா்.

இதில், பொருளா் சவுந்தர்ராஜன், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT