தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கல்குறிச்சி ஊராட்சியில் தலைவா் மற்றும் 9 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை பதவியேற்றனா்.
ஊராட்சி தலைவராக விஜிலா செல்வின், வாா்டு உறுப்பினா்களாக ஏசுதங்கம், நித்யா, கலா, வருண், கண்ணன், மேரிஜென்சி, ஜெயந்தி, உமா, ஜெகதீஸ் ஆகியோா் ஊராட்சி தோ்தலில் வெற்றி பெற்றனா். இவா்கள் அனைவரும் கல்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாா் முன்னிலையில் பதவியேற்றனா்.
இந்நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு மாவட்டப் பொருளாளா் பி.சி.என்.திலக்குமாா் , துரைராஜ், வேலப்பன் மற்றும் கட்சி நிா்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனா்.