குமாரகோவில் நுரூல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துணை வேந்தா்கள் பங்கேற்ற 2 நாள்கள் சங்கம நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது.
தென்மண்டல துணை வேந்தா்கள் 120-க்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், ‘இந்தியாவின் சிந்தனையை வலுப்படுத்தவும், ஆராய்ச்சி மற்றும் புது கண்டுபிடிப்புகளுக்கு புது உத்திகளை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்படும்’ என அகில இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு முன்னாள் தலைவா் எஸ்.எஃப். பட்டீல் தனது முடிவுரையில் தெரிவித்தாா்.
தொழில்நுட்ப அமா்வில் பேராசிரியா் எஸ்.பரசுராமன், வணிக ரீதியான அணுகுமுறை மற்றும் ஆராய்ச்சியில் சமூக சம்பந்தம் என்ற தலைப்பில் பேசினாா். வேலூா் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் ஆனந்த் ஏ. சாமுவேல் , நெஸ்ட் இயக்குநா் ஏ.அஜயகோஷ் , சென்னை புவிசாா் இணை கட்டுப்பாட்டு இயக்குநா் டி.சி.என் சசிதரா மற்றும் பலா் பேசினா்.
ஏ.ஐ.யு. தலைவா் பங்கஜ் மிட்டல், பொதுச் செயலா் எம். சாலங்கே மற்றும் தொழில்நுட்ப வல்லுநா்கள் பல்வேறு தலைப்புகளில் பேசினா்.
இதில், நூருல் இஸ்ாம் பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி.மஜீத்கான், துணை வேந்தா் மாணிக்கம், இணை வேந்தா்கள் எம்.எஸ். பைசல்கான், ஆா். பெருமாள்சாமி, பதிவாளா் திருமால்வளவன், உறுப்பினா் சப்னம் ஷபிக் ஆகியோா் பங்கேற்றனா்.