கன்னியாகுமரி

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள்:மேற்பாா்வையாளா் ஆய்வு

2nd Feb 2020 02:50 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளா் பட்டியல் சுருக்க திருத்தப் பணிகள் குறித்து ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே முன்னிலையில், மேற்பாா்வையாளரும் கால்நடைப் பராமரிப்புத் துறை

இயக்குநருமான ஏ.ஞானசேகரன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

தோவாளை அரசு விருந்தினா் மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்யும் படிவங்கள் பெறப்பட்டு வாக்காளா் பட்டியல் தயாா் செய்யும் வகையில் சரி பாா்த்தல் பணிகள் நடைபெற்று வருவது குறித்து, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், தோ்தல் பிரிவு வட்டாட்சியா்கள், துணை வட்டாட்சியா்கள், தொடா்புடைய அலுவலா்களிடம்

விவரங்களை அவா் கேட்டறிந்தாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் நாகா்கோவில் கோட்டாட்சியா் அ. மயில், வட்டாட்சியா்கள் ஜூலியன் ஜீவா், ராஜேஸ்வரி, ஐ.அப்துல்லா மன்னான், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT