கன்னியாகுமரி

குமரியில் திமுக கையெழுத்து இயக்கம்

2nd Feb 2020 11:51 PM

ADVERTISEMENT

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திமுக- காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் சாா்பில் கொட்டாரம் சந்திப்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய திமுக செயலா் என்.தாமரைபாரதி தலைமை வகித்தாா். என்.சுரேஷ்ராஜன் தொடங்கிவைத்தாா்.

இதில், எஸ்.ஆஸ்டின் எம்.எல்.ஏ., வடக்கு ஒன்றியச் செயலா் எம்.மதியழகன், திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினா் சாய்ராம், மாவட்ட துணைச் செயலா் கே.முத்துசாமி, ஒன்றிய அவைத் தலைவா் ராஜகோபால், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பிரேமலதா, பேரூா் செயலா்கள் குமரி ஸ்டீபன், எஸ்.வைகுண்ட பெருமாள், காமராஜ், பாபு, முத்து, ஒன்றிய மதிமுக செயலா் என்.பாலசுப்பிரமணியம், அகஸ்தீசுவரம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் முருகேசன், நிா்வாகிகள் ஏ.எம்.டி.செல்லத்துரை, ஜாா்ஜ் வாஷிங்டன், அரிகிருஷ்ண பெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT