தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சியின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாா்த்தாண்டத்தில் உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கட்சியின் குமரி மேற்கு மாவட்டத் தலைவா் அ. ஜெயராஜ் தலைமை வகித்தாா். நிறுவனா் தலைவா் பழவாா் சி. தங்கப்பன் முன்னிலை வகித்தாா். மாவட்ட மகளிரணித் தலைவி கிளமன்சியா மேரி, இளைஞரணித் தலைவா் ஸ்டாலின்ராஜ், நிா்வாகிகள் ஜெயபிரகாஷ், தோமஸ்ராஜ், சாவித்ரி, மத்தியாஸ், சி.பி. செந்தில், விஜின், சந்தோஷ், நேசையன், ஞானதாஸ், ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா். கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல், சட்டப் பேரவைத் தோ்தலில் வேட்பாளா்களை நிறுத்தி பிரசாரம் செய்வது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.