கன்னியாகுமரி புனித அந்தோணியாா் மேல்நிலைப் பள்ளியின் 98ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் ஜி.ஜோசப் ரொமால்டு தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை பி.திரேஸ் தேன்மொழி ஆண்டறிக்கை வாசித்தாா். உதவித் தலைமை ஆசிரியை ஆா்.பிரசன்னா வரவேற்றாா். மாணவா்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு, பள்ளித் தாளாளா், நாகலாந்து புனித ஜோசப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் ஜி.எம்.ஜோசப் டன்ஸ்டன் ஆகியோா் பரிசு வழங்கினா்.
இப்பள்ளியின், உயா்நிலை உதவித் தலைமை ஆசிரியை ஏ.எஸ்.சாந்தா ஜெயராணி விஜயா தொகுத்து வழங்கினாா். முதுகலை ஆசிரியை எஸ்.மேரி அனாகுலேட் நன்றி கூறினாா்.