சுற்றுலாச் சென்ற சிறுமிக்கு தொந்தரவு: இளைஞர் கைது

மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு சுற்றுலா சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக,  கட்டடத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு சுற்றுலா சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக,  கட்டடத் தொழிலாளியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
பூதப்பாண்டி அருகேயுள்ள நாவல்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெரின் (23). கட்டடத் தொழிலாளி. இவர், அப்பகுதியைச் சேர்ந்த சிலரை அழைத்துக்கொண்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு திங்கள்கிழமை சுற்றுலா சென்றாராம்.  மாத்தூர் தொட்டிப் பாலத்துக்கு சென்றபோது,  தனது தாய் மற்றும் உறவினர்களுடன் வந்திருந்த 9 வயது மாணவியை, ஜெரின் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தாராம். மாணவி கூச்சலிட்டதால், அவ்வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு, ஜெரினை போலீஸில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, ஜெரினை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com