குமரி மாவட்ட உள்ளாட்சி ஊழியர் சங்கக் கூட்டம்

குமரி மாவட்ட  உள்ளாட்சி ஊழியர் சங்கக் கூட்டம் குலசேகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

குமரி மாவட்ட  உள்ளாட்சி ஊழியர் சங்கக் கூட்டம் குலசேகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம். சுடலை தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எஸ்.சி. ஸ்டாலின்தாஸ்,  தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாவட்டச் செயலர் சந்திரன்,  உள்ளாட்சி ஊழியர் சங்க  நிர்வாகிகள் சஜிதா, ஷாஜி, ரமேஷ், மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், "தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை சுய உதவிக் குழுக்களாக மாற்றக் கூடாது;  சுய உதவிக் குழுக்களாக மாற்றம் செய்யப்பட்ட  ஊழியர்களை மீண்டும் ஒப்பந்த தொழிலாளர்களாக மாற்ற வேண்டும்; அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 19ஆம் தேதி தக்கலையில் கோரிக்கை மாநாடு நடத்துவது' ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com