அருமனை அருகே கார் மோதி பால் முகவர் பலி

குமரி மாவட்டம், அருமனை அருகே  கார் மோதியதில் பால் முகவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

குமரி மாவட்டம், அருமனை அருகே  கார் மோதியதில் பால் முகவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
அருமனை அருகேயுள்ள பனச்சவிளையைச்  சேர்ந்தவர் மோகன்(60).மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிர்வாகி மற்றும் தனியார் பால் நிறுவன முகவராக திகழ்ந்த இவர்,  முழுக்கோடு பகுதியில் ஒரு கடைக்கு பால் விநியோகம் செய்வதற்குவேனில் சென்றார். அங்கு, வேனின் பின்புறம் நின்று பால் பாக்கெட்டுகளை இறக்கியபோது,  அவ்வழியாகச் சென்ற கார் அவர் மீது மோதியதாம். இதில், பலத்த காயமுற்ற மோகன் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். இதுகுறித்து அருமனை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.  மோகனுக்கு மனைவி ஷீலா, இரு மகன்கள் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com