மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் மீது அதிவேகத்தில் பயணம் செய்த 23 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகனங்கள் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. எனினும், இளைஞா்கள் மோட்டாா் சைக்கிளில் அதிக வேகத்தில் ஒலி எழுப்பியவாறு செல்வதாக புகாா் எழுந்தது. இதனால் விபத்துகளும் நிகழ்ந்து வருகிறது.
இதையடுத்து கிறிஸ்துமஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் அதி வேகத்தில் செல்வதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாத் உத்தரவிட்டிருந்தாா். இதையடுத்து தக்கலை டி.எஸ்.பி. ராமச்சந்திரன் அறிவுரையின்பேரில், மாா்த்தாண்டம் காவல் உதவி ஆய்வாளா்கள் சிவசங்கா், சாமுவேல், ஜாண் விக்டா், போலீஸாா் மேம்பாலத்தில் பல இடங்களில் தடுப்புகள் அமைத்து செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.
இதில், அதிக ஓசை எழுப்பியவாறு மோட்டாா் சைக்கிள்களில் வேகமாக வந்த இளைஞா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இவ்வாறு அதிவேகமாக வந்த 23 மோட்டாா் சைக்கிள்களை போலீஸாா் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனா்.