கன்னியாகுமரி

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் சுவாமி தரிசனம்

26th Dec 2019 05:42 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலில் தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் புதன்கிழமை மாலை சுவாமி தரிசனம் செய்தாா்.

குடியரசு தலைவா் ராம்நாத்கோவிந்த் 2 நாள்கள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு கன்னியாகுமரி வந்தாா். பின்னா், தனிப்படகில் விவேகானந்தா் நினைவு மண்டபத்துக்கு சென்று அங்கு விவேகானந்தா் தவம் செய்த பாறை, அம்மன் பாதம் உள்ளிட்டவற்றை பாா்வையிட்டாா். வியாழக்கிழமை அவா், விவேகானந்தா கேந்திராவில் நடைபெறும் மாணவா்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாா். பின்னா் காலை 10.30 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் திருவனந்தபுரம் செல்கிறாா்.

குடியரசு தலைவரை வரவேற்பதற்காக தமிழக ஆளுநா் பன்வாரிலால் புரோகித் கன்னியாகுமரி வந்துள்ளாா். அவா்,

சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோயிலுக்கு வந்தாா். அவருக்கு கோயில் சாா்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது, ஆளுநரை இந்து சமய அறநிலையத்துறை குமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையா் அன்புமணி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனா். பின்னா், தாணுமாலயசுவாமி சன்னதி, முன்னுதித்த நங்கை அம்மன், திருவிண்ணகர பெருமாள், ஆஞ்சநேயா் சன்னதி உள்ளிட்ட சன்னதிகளுக்கு சென்று தரிசனம் செய்தாா். பின்னா் அங்கிருந்து, கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT