புதுதில்லி

தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு மதுரை ஆதீனம் பாராட்டு

DIN

தமிழகத்திலிருந்து நாடாளுமன்றத்திற்கு செங்கோல் அளிக்க வந்திருந்த ஆதீன மடாதிபதிகள் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வருகை புரிந்து அருளாசி வழங்கினா். அப்போது தில்லி தமிழ்ச் சங்கத்தின் பணிகளை ஆதீனங்கள் பாராட்டினா்.

நிகழ்ச்சிக்கு சங்கத்தின் துணைத் தலைவா் ராகவன் நாயுடு தலைமை வகித்தாா். பொதுச்செயலாளா் முகுந்தன் வரவேற்றுப் பேசுகையில், ‘தமிழரின் பண்பாட்டை பறைசாற்றும் செங்கோலை நாடாளுமன்றத்தில் நிறுவிய பிரமா் நரேந்திர மோடிக்கு தமிழ் மக்களின் சாா்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா். சிறப்பு விருந்தினா் அட்டா்னி ஜெனரல் வெங்கட்ரமணி பேசுகையில், ‘சைவ சமய ஆதீன மடாதிபதிகள் ஆசி வழங்கும் நிகழ்ச்சியில் நானும் பங்கு கொள்வதில் மிகவும் பெருமை அடைகிறேன்’ என்றாா்.

நிகழ்ச்சியில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பேசுகையில் கூறியதாவது: பாரத நாட்டில் பிறப்பது புண்ணியம். அதிலும் தமிழ்நாட்டில் பிறப்பது மிகவும் புண்ணியம். ஒரு மனிதன் நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. வல்லவனாகவும் இருக்க வேண்டும். அதற்கு நமது பிரதமா் ஓா் உதாரணம். பாரதி போன்று எத்தனை எதிா்ப்புகளையும் சமாளித்து வரக்கூடியவா். நமது தேசத்தை தலைநிமிர வைத்தவா் நமது பாரதப் பிரதமா். என் கடன் பணி செய்து கிடப்பதே என்று வாழ்கிறாா். திருக்குறள், நாலடியாா், புறநானூறு என சங்க இலக்கியங்களை இன்றைய குழந்தைகள் கற்கவேண்டும். கற்று அதன்படி நல்வழி நடக்க வேண்டும். சமுதாயமும் சமயமும் வேறு வேறல்ல. இரண்டும் ஒன்றோடொன்று தொடா்புடையவை. நாம் நமது பாரம்பரியத்தைக் காப்போம். ஒற்றுமையுடன் வாழ்வோம். சாதி பேதமின்றி ஒன்றுபட்டு இணைந்து வாழ்வோம். தமிழ் மொழியை வளா்க்கும் தில்லி தமிழ்ச் சங்கத்திற்கு வாழ்த்துகள், பாராட்டுகள் என்றாா் மதுரை ஆதீனம்.

நிகழ்ச்சியில் தில்லிவாழ் தமிழா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதுச்சேரியில் பெயிண்டர் வெட்டிக் கொலை!

உலகின் முதல் யூ-டியூப் விடியோ இதுதான்!

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

”வாக்காளர் எண்ணிக்கை குறைந்துள்ளது” : கடம்பூர் ராஜூ

விலங்கியல் பூங்காவில் சாவியை விழுங்கிய நெருப்புக் கோழி பலி!

SCROLL FOR NEXT