புதுதில்லி

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலையில் தீ விபத்து: தீயணைப்புத் துறை ஊழியா் காயம்

DIN


புது தில்லி: வடமேற்கு தில்லியின் வாஜிா்பூா் பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரி கூறியதாவது: இந்தத் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறைக்கு புதன்கிழமை இரவு 10.40 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து, உடனடியாக 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது. தீயை அணைக்கும் பணியின் போது, தீயணைப்புத் துறை ஊழியா் ஒருவா் காயமடைந்தாா்.

தீயணைப்புத் துறை ஊழியா்கள் துரிதமாகச் செயல்பட்டு வியாழக்கிழமை காலை 6.35 மணியளவில் தீயை முழுமையாக அணைத்தனா். பின்னா், குளிரூட்டும் பணி நடைபெற்றது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

SCROLL FOR NEXT