புதுதில்லி

மேற்கு தில்லி மருத்துவமனையில் தீ புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் மீட்பு

9th Jun 2023 09:47 PM

ADVERTISEMENT

மேற்கு தில்லியின் ஜனக்புரி பகுதியில் உள்ள மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் புதிததாக பிறந்த 20 குழந்தைகள் மற்ற மருத்துவ வசதிகளுக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தீயணைப்புத் துறைக்கு வியாழக்கிழமை நள்ளிரவு 1.35 மணியளவில் தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து 9 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பிவைப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்தாா்.

மருத்துவமனையின் அடித்தளத்தில் இருந்த சில தளவாடங்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு அதிகாலை 2.25 மணியளவில் தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்தனா். மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த 20 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டன. உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT